தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சுருக்குமடி வலையை தடை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த கூழையாறு, கொட்டாய்மேடு, பழை யாறு, தொடுவாய் ,கொடியம்பாளையம், சாவடிகுப்பம் உள்ளிட்ட 19 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கடல் வளங்களை பாதுகாக்கவும், மீன் வளத்தை பெருக்கவும் பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அரசினால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டைமடி வலை, அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு இவை மூன்றும் ஒரு வார காலத்திற்குள் அரசு தாமே முன்வந்து தடை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.