tamilnadu

img

வாலிபர் சங்கத்தின் குப்பை கொட்டும் போராட்டம் ஒத்திவைப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26- ஸ்ரீரங்கம் 3-வது வார்டில் உள்ள நுண்உரம் செயலாக்கத்தில் உள்ள குப்பை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை கண்டித்து இந் திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங் கம் பகுதிக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத் தில் குப்பைகொட்டும் போராட்டம் ஜூன் 27-ம் நடைபெறும் என அறி வித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர்(பொ) சிவபாலன் தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை புதனன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 3-வது வார் டில் உள்ள நுண்உயிர் செயலாக்க மையத்தில் வெளியே உள்ள குப்பைகளை உடனே அகற்ற வும், இடிந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவரை உடனே கட்டித்தரு வது என முடிவானது. இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.  இந்த பேச்சு வார்த்தையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா, மாநகர் மாவட்டத் தலைவர் சந்திரபிரகாஷ், பகுதி பொருளாளர் சந்துரு, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணி யன், இளநிலை பொறியாளர் பால முருகன் ஆகியோர் கலந்து கொண் டனர்.