திருத்துறைப்பூண்டி, பிப்.7- மத்திய அரசின் மக்கள், தொழி லாளர் விரோத பட்ஜெட் அறி விப்பைக் கண்டித்து சிஐடியு திரு வாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகர ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் யு.ராமச் சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஹனிபா, தலைவர் ஏ.நபி, என்.பவுன்ராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.லெனின், தலை வர் பாப்பையன், சிவபாலன், மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டியன், எம். முரளி, ஏ.கே. செல்வம், எம். சண் முகம், லிகாய் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் வி.வி.செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார்.