tamilnadu

img

பி.பெருமாள் நினைவு கருத்தரங்கம் குலசேகரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

நாகர்கோவில், மே 14-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், உழைக்கும் மக்களின் உரிமைப்போராளியுமான தோழர் பி.பெருமாள் நினைவு தின கருத்தரங்கம் குலசேகரத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, தோட்டத்தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வல்சகுமார் ஆகியோர் உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், கே.மாதவன், என்.எஸ்.கண்ணன், எம்.அகமது உசேன், எஸ். ஆர் .சேகர், விஜயமோகனன், வட்டார செயலாளர் விஸ்வம்பரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.