tamilnadu

img

ஓய்வு பெற்ற விஏஓக்களை மீண்டும் பணியமர்த்துவதற்கு எதிர்ப்பு

தஞ்சாவூர், ஜூலை 4- படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக் கும் வகையில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி யில் அமர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு கிராம நிர்வாக அலு வலர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வரு வாய்த்துறை ஊழியர் சங்க வட்டத் தலைவர் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சுப்பிரமணியன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம உதவி யாளர் சங்கம் வருவாய் அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 25 பெண்கள் உள்ளிட்ட 75 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டச் செயலாளர் கமலநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் இஅடங்கல் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இ-அடங்கல் திட்டத்தை போதிய உபகரணங்கள் இன்றி கொண்டு வரக்கூடாது. வாட்ஸ் அப்பில் நிர்வாகம் செய்யக் கூடாது” உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.