tamilnadu

நாகப்பட்டினம் , புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் முக்கிய செய்திகள்

வேதாரணியத்தில் கனமழை

நாகப்பட்டினம், ஜூலை 19- நாகை மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளி யன்று வேதாரணியம் வட்டப் பகுதிகள் முழுவதும் மிகக் கடுமையாக மழை கொட்டியது. இதனால் உழவர்களும் மக்களும் குளிர்ந்தனர். தொடர்ந்து மாவட்டம் முழு வதும் வானம் மப்பும் மந்தாரமுமாகவே உள்ளது.

சமையலர், துப்புரவு ஊழியர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூலை 19- புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை கட்டுப்பாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி மற்றும் மன்னார்குடி கிளைச் சிறைகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் விவரம்:- திருத்துறைப் பூண்டி-1, மன்னார்குடி-1. இதற்கு தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தது 2 வருடம் சமையலர் பணி அனுபவம் வேண்டும். மேலும் துப்புரவு பணியிடங்கள் விவரம்: நன்னிலம்-1, திருத்துறைப்பூண்டி-1, மன்னார்குடி-1. இப்பணியிடத்திற்கு தகுதி: தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 2 வருடம் பணி அனுபவம் வேண்டும். இப்பணியிடத்திற்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் சிறைக் கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை, புதுக்கோட்டை-622 001, தொலைபேசி எண்: 04322-222220 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களை தனியாரிடம் வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 19- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர்களின் சங்கத்தின் சார்பில் அங்கன்வாடி மையங்களை தனியார் மையப்படுத்தும் திட்டத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் எஸ்.சாந்தி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா ளர் வி.தவமணி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வி.சோம சுந்தரம், மாவட்ட தலைவர் ஜி.பைரவநாதன், சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, மாவட்ட துணைத் தலை வர் ஜி.பழனிவேல், துணைச் செயலாளர் எஸ்.வைத்திய நாதன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.தேவமணி ஆகியோர் விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், துறைச் சார்ந்த பணியைத் தவிர்த்து இதர பணிகளில் அமர்த்தக் கூடாது, மத்திய அரசு அறி வித்த கூடுதல் சம்பளத்தை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊழியர் விரோத நடவடிக்கையை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 19- தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க திரு வாரூர் மாவட்ட மையம் சார்பாக மாநில துணைத் தலை வர் வெ.சோமசுந்தரம் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப் பட்ட அலுவலர் ஊழியர் விரோத நடவடிக்கையினை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் எம்.சௌந்தரராஜன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் ஊ.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்தார்.

வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை யில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இதுவரை மாதந்தோறும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்று வந்தது. மாவட்டத்தின் கடைக்கோடி யில் இருந்து வருகை தரும் விவசாயிகள் மிக நீண்ட தொலைவில் அதிக தொகை செலவு செய்து வர வேண்டி யுள்ளது. எனவே, வரும் நாளில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்க ளில் முதல் வியாழக்கிழமையன்று இந்த குறைதீர் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்களை இரண்டாவது வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.