திருச்சிராப்பள்ளி, மே 27- தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தப்படி, குடிநீர்தொட்டி இயக்கு பவர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூ.2600-லிருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மை காவலர்க ளுக்கு ரூ.2600-லிருந்து ரூ.3600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை யை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். 2010 ஆண்டு முதல் 2013 வரை பணி புரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வேண்டும். 10.5.2000 ஆண்டிற்கு பின் பணிபுரிந்த குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணை படியும், ஒப்பந்தப்படியும் கணினியில் பதிவு செய்து முழு சம்பளம் வழங்க வேண்டும். பணி பதிவேடு தொடங்க வேண்டும். கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கையை எடுப்பதோடு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
மணப்பாறையில் சங்க செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான், வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு மற்றும் சங்க தலைவர் அம்மாசி, பொருளாளர் பிரேம்குமார், வாலிபர் சங்க வட்ட தலைவர் ஆவா.இளையராஜா, சிறு பான்மை நலக்குழு பொருளாளர் முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக் கொடுக்கப்பட்டது.
செம்பனார்கோவில்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓ.ஹெச்.டி ஆப்ரேட்டர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வில்சன், தலைவர் மனோகர், பொருளாளர் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்டர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர்
திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சி.சுந்தரலிங்கத்தைச் சந்தித்து கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் - என்.எம்.ஆர் ஊழியர்கள் (சிஐடியு) சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.முனி யாண்டி தலைமையில், சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, செயலாளர் டி.முரு கையன், சங்க மாவட்ட பொருளாளர் வி.பி.ஞானசேகரன் மற்றும் நிர்வாகி பன்னீர்செல்வம் ஆகியோர் மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வ தாக உறுதி அளித்தார். குடவாசல்
மனு வழங்கும் போராட்டத்திற்கு சங்கத்தின் குடவாசல் வடக்கு பகுதி ஒன்றியச் செயலாளர் கே.காத்தலிங்கம் தலைமை வகித்தார். தெற்கு பகுதி ஒன்றியச் செயலாளர் கே.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் டி.கலியமூர்த்தி, வடக்குபகுதி ஒன்றியத் தலைவர் ஆர்.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் குடவாசல் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நா.பால சுப்பிரமணியன் ஊழியர்களின் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன் மற்றும் ஊழியர்கள் உடனி ருந்தனர். திருத்துறைபூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஓஎச்டி பணியில் ஈடுபட்டு உயிரி ழந்த திருத்தங்கூர் குப்பு, வரம்பின் தாமஸ், கொத்தமங்கலம் பாரதி உள்ளிட்டோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இறப்பு நிதி ரூ. 3 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அந்தப் பணியையும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.