tamilnadu

img

குடந்தை தோழர் மாரிமுத்து காலமானார்

கும்பகோணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகரக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைத் தலைவருமான அறிவுராணி தந்தையும் சிபிஎம் மன்னார்குடி நகர முன்னாள் செயலாளருமான தோழர் மாவன்னா என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் மாரிமுத்து(83), வயது முதிர்வு காரணமாக வெள்ளி அன்று காலமானார்.  மறைந்த தோழர் மாரிமுத்து, மன்னார்குடி முன்னாள் நகரக்குழு செயலாளர் பொறுப்பில் இருந்து அப்பகுதி உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். மேலும் தோழர் மாரிமுத்து இறந்த பின்பும் இரவா தனது கண்களை தானம் செய்துள்ளார். கும்பகோணம் பாவை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட தோழர் மாரிமுத்து உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை. பாண்டியன், சி.ஜெயபால், செந்தில்குமார், அருளரசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, சி.நாகராஜன், எம்.மாலதி, பி.பார்த்தசாரதி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் கும்பகோணம் நகர செயலாளர் கா.செந்தில்குமார், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், கும்பகோணம் நகர குழு ராஜகோபாலன், சந்திரன் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.