tamilnadu

ஜூலை 9-ல் தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பேரணி

தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூரில் காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க(சிபிஎம்) மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாய சங்கம்(சிபிஐ) மாவட்டச் செயலாளர் பா. பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன், மக்கள் அதிகாரம் காளி யப்பன், திமுக விவசாய அணி ரவிச்சந்திரன், தாளாண்மை விவசாயிகள் இயக்கம் திருநாவுக்கரசு, சம வெளி விவசாயிகள் இயக்கம் பழனிராஜன், ஜனநாயக விவசாயிகள் சங்கம் அருணா சலம், விடுதலைச் சிறுத்தை கள் சுரேந்திரன், தமிழக விவ சாயிகள் சங்கம் துரை.பாஸ்கர், தமிழ் தேசிய இயக்கம் அயனாவரம் முருகேசன், அருண்சோரி, வணிகர் சங்கம் அப்துல் நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ஜூலை 1 முதல் 5 வரை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனை த்து ஒன்றியங்களிலும், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் கிளைகள் அமைப்பது, அதனைத் தொடர்ந்து அனைத்து கிரா மங்களுக்கும் சென்று கமிட்டி அமைத்து, ஜூலை 9 ஆம் தேதி ஆட்சியர் அலுவ லகம் நோக்கி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழ் நாட்டிற்கு உரிய தண்ணீரை கேட்டு பெற வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்க ணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.