tamilnadu

ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன்16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி வரி மற்றும் வருமான வரி தாக்கல் செய்தல் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீ அய்யப்பா ஆடிட்டர் அன் கோ நிறுவனர் எம்.ஜி.முருகேசன் தலைமை வகித்தார். நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், திருச்சிற்றம்பலம் வர்த்தக சங்க தலைவர் எஸ்.செல்வராஜ், கைகாட்டி வர்த்தக சங்க தலைவர் கே.பி.சிவசாமி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.  தஞ்சாவூர் வருமான வரி ஆடிட்டர் கே.விசாகன் பேசினார். பேராவூரணி நகர வர்த்தகர் கழக செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், திருச்சிற்றம்பலம் வர்த்தக சங்க செயலாளர் ஜெ.சதீஷ்குமார், கைகாட்டி வர்த்தக சங்க செயலாளல் ஏ.வினோத், பேராவூரணி நகர வர்த்தகர் கழக பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, திருச்சிற்றம்பலம் வர்த்தக சங்க பொருளாளர் சி.ரமேஷ், கைகாட்டி வர்த்தக சங்க பொருளாளர் ஏ.எஸ்.ஏ. மணிகண்டன் ஆகியோர் பேசினர். இதில் ராஜம் வீரப்பா எண்டர்பிரைசஸ் உரிமையாளர் இ.வீ.காந்தி, அபிராமி மளிகை உரிமையாளர் ஆர்.சுப்பிரமணியன், பழ.பழனியப்பன், ஜி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.