tamilnadu

விவசாயிகள் சங்க அமைப்புக் கூட்டம்

மன்னார்குடி, மே 21-தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரக்குழு அமைப்புக் கூட்டம் மன்னார்குடியில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன், மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நகரக் கிளை தலைவராக ஜி. ரெகுபதி, கிளை செயலாளராக ஜி.மாரிமுத்து. பொருளாளராக எஸ்.நந்தகுமார், துணைத்தலைவராக எம்.சிராஜுதீன், இணைச் செயலாளராக எஸ்.ஏகாம்பரம் உள்ளடக்கிய 9 பேர் கொண்ட நகரக்குழு தேர்வுசெய்யப்பட்டது.புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மன்னார்குடி நகரப் பொறுப்பாளர் கே.அகோரம் உள்ளிட்டோர் உரையாற்றினார். முடிவில் மாநிலத் தலைவர் வி. சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.