tamilnadu

img

பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.6- தென்னக ரயில்வே துறையின் திருச்சி கோட்டத்தில் டிக்கெட் பரிசோத கர்களாக 150 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பணி நேரத்தை அதிகரித் தது மற்றும் பணிச்சுமையை குறைக்கக் கோரி மேல் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்காததை கண்டித்தும் இது குறித்து உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்தியும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் திருச்சி கோட்ட பொது கிளை சார்பில் அதிகாரிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே தபால் நிலை யத்தில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு பொது கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தில் பொது கிளைத் தலைவர் சர்மா, உதவி கோட்ட செயலாளர்கள் சரவணன், சுப்ரமணி யன், உதவி கோட்டத் தலைவர் சார்லஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.