திருச்சிராப்பள்ளி, செப்19- திருச்சி– தஞ்சை மெயின் ரோட் டில் உள்ள சாலையோர வியாபாரி களை அப்புறப்படுத்த முயற்சிக்கும் மதுக்கான் நிறுவனத்தை கண்டித்தும். சாலையோர வியாபாரிகளை வியா பாரம் செய்யும் அதே இடத்தில் வியா பாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை யோர வியாபாரிகள் சங்க திருச்சி புற நகர் மாவட்ட துவாக்குடி கிளை சார்பில் புதனன்று பெல் கைலாசபுரம் டிரைனிங் சென்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செய லாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் அருணன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் தங்கவேலு, வி.தொ.ச மாவட்ட பொருளாளர் தெய்வநீதி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அப்துல்கரீம், அஜீஸ், முருகேசன், வளர்மதி, சாத் தையா, ஜபருல்லா, லோகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். சாலையோர வியாபாரிகள் சங்க முகம்மது செரீப் நன்றி கூறினார்.