திருச்சிராப்பள்ளி, நவ.16- சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவை திருச்சி வெண்மணி இல்லத்தில் வெள்ளியன்று மாலை நடை பெற்றது. கூட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வீர முத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுகு மாறன், மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டச் செயலா ளர்கள் அரசு விரைவு போக்கு வரத்து சங்க ஜெயராமன், ஆட்டோ சங்க மணிகண்டன், தையல் தொழிலாளர் சங்க பிரமிளா, பொதுத்தொழிலாளர் சங்க செல்வி, குடிநீர் வடிகால் வாரிய சங்க மருதைராசு, கட்டுமான சங்க சந்திரசேகரன், அரசு மருத் துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்க கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு செல்வராஜ், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க ராமச்சந்திரன், மாவட்ட தலை வர்கள் சுமைப்பணி தொழிலாளர் சங்க குணசேகரன், தரைக்கடை சங்க கணேசன், அரசு போக்கு வரத்து கழக சீனிவாசன், டிஆர்இயு கோட்ட உதவி தலைவர் மகேந்திரன், ஆட்டோ ஜங்சன் பகுதி அழகப்பன், பொன்மலை பகுதிக்குழு ஆகி யோர் மாநாட்டு நிதியாக ரூ. 4,43,500 வழங்கினர். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன் நன்றி கூறினார்.