தொடங்கியது பிங்க் டெஸ்ட்
டெஸ்ட் போட்டியின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்க இந்திய கிரிக்கெட் வாரியத் (பிசிசிஐ) தலைவர் கங்குலி பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த உத்தரவிட்டார். வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டியைப் பகலிரவு டெஸ்ட் (பிங்க் டெஸ்ட்) போட்டியாக நடத்தத் திட்டமிட்டி ருந்த நிலையில், வெள்ளியன்று கொல்கத்தா நகரில் பிங்க் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்திய மண்ணில் புதிய வரலாற்று அம்சமாக அடியெடுத்து வைத்துள்ள இந்த பிங்க் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வழக்கத்திற்கு மாறாக 3 பந்துவீச்சாளர்களைத் தொடக்கத்திலேயே களமிறக்கி வங்க தேச அணியை திணற வைத்தது. பந்து நிறம் மற்றும் இந்திய அணியின் மிரட்ட லான பந்துவீச்சு என இரண்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட வங்கதேச அணி 60 ரன்களுக்குள் (6 விக்.,) மிடில் ஆர்டரை இழந்தது. கடந்த டெஸ்ட் போட்டியில் அசத்திய கேப்டன் மொமினுல், மிதுன், ரஹீம் ஆகியோர் தங்க முட்டையுடன் (0) வெளி யேறி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். விக்கெட்டுகள் வீழ்த்து வதில் தொடர்ந்து வேகம் காட்டிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் செக் வைத்தார். நிதானமாக ரன் சேர்த்த தாஸ் காயம் காரணமாக (?) பெவிலி யன் (ரிட்டயர்டு ஹார்ட்) திரும்பினார். 2-ஆம் சீசன் முடிவில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.