tamilnadu

img

செயலிழந்த இருதயம் மீண்டும் துடிப்பதற்கு உதவும் நவீன கருவி வழங்கல்

மன்னார்குடி, பிப்.23-  மாரடைப்பு மற்றும் இருதயம் செயலிழப்பு ஏற்படும் போது முறையான முதலுதவி சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளி யைக் காப்பாற்ற முடியும். அந்த வகையில் ஆட்டோமேட்டட் எக்ஸ்டெர்னல் டிபிரிலேட்டர் எனும் கருவி நின்று போன இத யத்துடிப்பை மீண்டும் செயல் படுத்த உதவுகிறது. இக்கருவி யின் மூலம் இதய செயலிழப்பு ஏற்பட்ட நபரின் மார்பு பகுதியில் செயற்கையான மின் அதிர்வுகள் ஏற்படுத்தப்பட்டு செயல் இழந்த இருதயம் மறுபடியும் துடிப்ப தற்கு வழிவகை செய்யப்படுகிறது. இக்கருவியை செயல்படுத் தும்விதம் குறித்து தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக பணியா ளர்களுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறைத் தலை வர் டாக்டர் சரவணவேல் தலை மையிலான மருத்துவக் குழு வினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் ஆட்டோமேட்டட் எக்ஸ்டெர்னல் டிபிரிலேட்டர் கருவி தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுனர் மற்றும் சுயமுன்னேற்ற பயிற்சி யாளர் டாக்டர் சுபாஷ் சந்திரன், மீனாட்சி மருத்துவமனை தலை மை நிர்வாகி டாக்டர் பாலமுரு கன், மனிதவளத்துறை மேலாளர் செல்வபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.