tamilnadu

img

ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக! நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

 திருவாரூர், ஆக.21- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு திருவாரூரில் நடை பெற்றது. இப்பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சங்க மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.மோகன் மற்றும் சங்க மாநில செயலாளர் பி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்க மாநில துணைத் தலைவர் கே.சண்முகம் வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்தி ரன் துவக்கவுரையாற்றினார். சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் வாழ்த்துரை வழங்கினார்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்துவதை கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத்தை பாதுகாத்து, அதில் இருக்கும் குளறுபடிகளை களைந்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  சுமைப் பணி தொழிலாளர்களுக்கு எஃப்சிஐ-க்கு இணையான கூலி வழங்க வேண்டும். கணினி பிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கொள்முதல் பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சங்க தலைமை அலுவலக செயலாளர் கெ.ராஜாங்கம் நன்றியுரை வழங்கினார்.