tamilnadu

img

நன்னிலம், குடவாசலில் ஆற்று நீரில் மூழ்கி 5 குழந்தைகள் பலி

திருவாரூர், செப்.25- திருவாரூர் மாவட்டத்தில் நன்னி லம் மற்றும் குடவாசல் வட்டத்தில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய நாட்க ளில் மட்டும் ஆற்று நீரில் குளிக்கச் சென்ற ஐந்து குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. குடவாசல் அருகே கண்டிர மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது குழந்தைகள் திவ்யா(11), ஸ்ரீராம்(8) ஆகிய இரு வரும் வீட்டின் அருகே உள்ள திருமலை ராஜன் ஆற்றில் மூழ்கி இறந்தனர். பள்ளிக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு அருகே இருந்த திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் மணல் வெட்டி யிருந்த குழியில் தெரியாமல் மூழ்கி உள்ளனர். குழந்தையை காணாது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது. குழந்தைகளின் உடை கள் ஆற்றின் கரையில் இருந்ததை பார்த்து ஆற்றில் தேடியுள்ளனர். அப்போது ஸ்ரீராமை இறந்த நிலையிலும், திவ்யாவை ஆபத்தான நிலையிலும் மீட்டு குடவாசல் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இதை தொடர்ந்து நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள புத்தர் மயிலாடி பகுதியைச் சேர்ந்த நட ராஜன் மகன் வெங்கடேசன்(7) மற்றும் ஸ்ரீவாஞ்சியத்தினை சேர்ந்த அண்ணாமலை மகன் விக்னேஷ்(7) ஆகிய இருவரும் திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்தும் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நான்கு குழந்தை கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு சம்பவம் 
குடவாசல் வட்டம் வடகண்டம் வெட்டாற்றில் புதன்கிழமையன்று காலை குளிப்பதற்கு சென்ற பதி னைந்து வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார். மணக்கால் அய்யம்பேட்டை ஜீவா தெருவைச் சேர்ந்த சேகர் மகன் ஜெயசீலன்(15) வீட்ட ருகில் இருக்கின்ற வெட்டாற்றில் குளிப்ப தற்கு சென்றபோது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. தண்ணீரில் குளிப்பதற்கு இறங்கும் போது நீரின் வேகத்தில் இழுத்து செல் லப்பட்டதாக தெரிகிறது. விபரம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை யினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.  மழைக்காலமாகவும் இருப்பதா லும் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும் ஆற்று ஓரங்களில் உள்ள மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கவனமாக பார்த்துக் கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.