tamilnadu

img

திருவண்ணாமலை தீபவிழா - பலத்த பாதுகாப்பு

திருவண்ணாமலை, டிச. 7- திருவண்ணாமலை தீபவிழாவை முன்னிட்டு, ஏழாம் நாளான சனிக்கிழமை யன்று திருவண்ணாமலை மாட வீதிகளில், மக்கள் வெள்ளத்தினிடையே தேரோட்டம் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தும் விதமாக பல்வேறு தரப்பு, பல்வேறு  பிரிவு மக்களும் ஒன்றுகூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறை யினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் செவ்வாயன்று (நவ.10) நடைபெறும் தீபவிழாவிற்கு உல கின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அண்ணாமலையார் கோயில், மலைசுற்றும் பாதை, திருவண்ணாமலை நக ரின் பல்வேறு இடங்களில் 275 கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்ற நடவடிக்கைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.