திருவண்ணாமலை, மார்ச் 1- திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு அடுத்த பெரிய கல்லபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரின் கணவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு இறந்து விட்டார். கிருஷ்ணவேணி தனது இளைய மகன் ஜீவாவுடன் வசித்து வருகிறார். மற்றொரு மகன் சீனிவாசன் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் வசித்து வரு கிறார். இந்நிலையில் கிருஷ்ண வேணிக்கு சொந்தமான சொத்தை தன் பெயருக்கு மாற்றக்கோரி சீனிவாசன் தாயிடம் தகராறு செய்து ள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்ளுக்கு முன்பு சீனிவாசன், தாய் கிருஷ்ண வேணியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் எலும்பு உடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகனை கைதுசெய்ய வேண்டும் என கிருஷ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.