tamilnadu

img

அருந்ததிய பெண் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, பிப். 27- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப் பட்டு வட்டம் காட்டுத் தெள்ளூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அனுபவத்தி லிருந்து அருந்ததியர்களை வெளியேற்ற பழுங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் சசி கலா அடித்து படுகொலை செய்யப்பட்டுள் ளார். இந்த கொலையைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் சேத்துப்பட்டு வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு  சிபிஎம் தாலுகா செயலா ளர் கே.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அருந்ததிய பெண் சசிகலாவை கொலை  செய்த சாதிவெறியர்கள் மீது, உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும், அனுபவ நிலத்  திற்கு உடனே பட்டா வழங்க வேண்டும், படுகொலை செய்யப்பட்ட சசிகலாவின் குடும்  பத்திற்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்  கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.  இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு நிர்வாகி எம்.வீரபத்தி ரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், எஸ். ராமதாஸ், பெ.கண்ணன், தலித் விடுதலை  இயக்க பொதுச் செயலாளர் ச. கருப்பையா,  நிர்வாகிகள் அமுல்சாமி, தலித் நதியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.