tamilnadu

லாரி மோதி மாணவன் பலி

புழல், மே 30-திருவண்ணாமலை மாவட்டம் அதமம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சக்திவேல் (17). அதே பகுதி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவந்தார். கோடை விடுமுறைக்காக சக்திவேல் செங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து  சக்திவேல் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் வந்தபோது மணலில் நிலைதடுமாறி கிழேவிழுந்தார். அப்போது  பின்னால் வந்தலாரி அவர் மீது மோதியதில் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரியலிங்கம் (50) என்பவரை கைது செய்தனர்.