tamilnadu

லாரி மோதி இடிந்து விழுந்த நிழற்குடை

அவிநாசி, பிப். 29- அவிநாசி ஒன்றியத்திற் குட்பட்ட பழங்கரை ஊராட் சியில் அவிநாசிலிங்கம் பாளையத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப் பேருந்து நிறுத்தத்தில் தினசரி பனியன் தொழிலா ளர்கள், பள்ளிக் குழந்தை கள், பொதுமக்கள் என ஏரா ளமானோர் பேருந்திற்காக நிழற்குடையில் காத்திருப் பது வழக்கம்.  இந்நிலையில் வெள்ளி யன்று இரவு அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி  அதிவேகமாகச் சென்ற லாரி, பயணியர் நிழற்குடை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிழற்குடை இடிந்து அருகி லிருந்த  பெட்டிக்கடையின் மீது விழுந்து உருக்குலைந் தது. இதில் கடையிலிருந்த முதியவர் எவ்வித பாதிப்பு மின்றி உயிர் தப்பினார். இது  குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.