திருவண்ணாமலை, ஆக. 1- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவி தீபா, செங்கம் வட்டம் நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவி பிரியா ஆகியோர் ஏழ்மையான நிலையிலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் முறையே சென்னை கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி அந்த மாணவிகளை நேரில் சென்று சந்தித்து தலா 50,000 ரூபாய் வழங்கி பாராட்டி னார். உடன் ஆரணி வருவாய் கோட்ட அலுவ லர் மைதிலி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி ஆகியோர் உடனிருந்தனர்.