திருவள்ளூர் ஜூன் 28- 6 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து சேமியா தொழிற்சாலை ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோழவரம் அடுத்த அலமாதியில் தனி யார் சேமியா தொழிற்சாலையில் சுமார் 100 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். ஊர டங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணியற்றும் ஊழியர்க ளுக்கு கடந்த 6மாத காலமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து சனிக்கிழமை யன்று (ஜூன் 27) ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர், நிர்வாகத்தி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.