tamilnadu

img

கொடுமணல் விரிவான அகழாய்வு தேவை: கே.சுப்பராயன் எம்.பி.,

திருப்பூர், ஜூலை 2 – திருப்பூர் அருகே நொய்யல் நதிக் கரையில் அமைந்திருக்கும் கொடு மணலில் தமிழக அரசின் சார்பில் நடை பெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் திருப்பூர் தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் புத னன்று பார்வையிட்டார். கொடுமணல் அகழாய்வுப் பணி களைப் பார்வையிட்ட பிறகு கே.சுப்ப ராயன் எம்.பி. கூறுகையில், இதிகாசங்க ளிலும் இலக்கியங்களிலும் நடுகற்க ளிலும் பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அவற் றைக் காட்டிலும் அதிகமான ஆதாரங்க ளோடும், உண்மைத் தன்மையோடும் ஆதி  மனிதர்கள் எப்படி வாழ்ந்தார் கள் என சொல்வது தொல்லியல் அக ழாய்வுகளில் தான். தமிழகத்தில் நடை பெறும் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்து இருக்கக்கூடிய தொன்மை யான பொருட்களின் அடிப்படையில் இதன் காலம் ஏற்கெனவே கணித்ததை விடவும், மேலும் பின் நோக்கி செல் கிறது என்பதை கீழடி அகழாய்வு காட்டு கிறது. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் கொடுமணல் இருக்கிறது என்பதை கிடைத்திருக்கிற பொருட் களைப் பார்த்தாலே புரிகிறது. எனவே இதுகுறித்து இன்னும் விரிவான அக ழாய்வு தேவை. தமிழக தொல்லியல் ஆய்வுகள் குறித்து மத்திய அரசு போது மான அக்கறை செலுத்துவது இல்லை. இங்கு பணியாற்றும் பணியா ளர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே நாடாளுமன்ற உறுப்பி னர் என்ற முறையில்  இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான கடிதம் எழுதி கொடுமணல் தொல்லியல் அகழாய் வுக்கு அதிக நிதியை ஒதுக்க வலி யுறுத்துவேன் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகி கள் உடன் இருந்தனர்.