tamilnadu

img

திருவோடு ஏந்தி மனு அளித்த  ஊராட்சிமன்ற உறுப்பினர்

அவிநாசி, மே. 5 - அவிநாசி அருகே நியாய விலை கடைகளில் பொருட்களை முறையாக விநியோகிக்க வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்  திருவோடு ஏந்தி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உட்பட்ட பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் பெருமாநல்லூர், வலசுபாளையம் மற்றும்  பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக கோதுமை  சரியாக வினியோகம்  செய்யப்படவில்லை. இதையடுத்து பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் முறையாக கோதுமை விநியோகம் செய்யக்கோரியும், தமிழக அரசின் 500 ரூபாய் மலிவு விலை மளிகைப் பொருட்களை உடனடியாக வழங்கக்கோரியும் திருவோடு ஏந்தி வட்ட வழங்கல் அதிகாரியிடம்  மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மனுவைப் பார்த்த அதிகாரி உடனடியாக அப்பகுதிக்கு ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்தார்.