tamilnadu

img

சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை - வடமாநில தொழிலாளர்கள் ஆவேசம்

அவிநாசி, மே 7- அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த  ஆடை உற்பத்திப் பூங்காவில் பணிபு ரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி வியாழனன்று டயர்களை எரித்து சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற் பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மையத்தின் துணை நகரமாக அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடைப்  பூங்கா (நியூ திருப்பூர்) உள்ளது. இதில்  100-க்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தி லும் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு உத்தரவு காரண மாக இந்நிறுவனங்கள் இயங்கா மல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.  

தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுப் பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள் ளதால், சில பனியன் நிறுவனங்கள் இயங்கத் துவங்கியுள்ளன. இதற்கிடையில்  ஊரடங்கு காரண மாக முடங்கியிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் நியூ திருப்பூர் அருகே இணைப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  டயர்களை தீவைத்து எரித்து சாலை யில் உருட்டி விட்டதாகத் தெரிகிறது. இதனால் உருண்டு ஓடிய டயர்களில் இருந்த தீ காட்டுப் பகுதியில் பரவி யது.  

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலை மையிலான போலீசார் தொழிலா ளர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் தொழிலாளர்கள் பணிபுரியும் அந்தந்த நிறுவனத்தினர் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைப்படும் என உறுதியளித்தனர். இதன் அடிப்ப டையில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். இது  தொடர்பாக பெருமாநல்லூர் போலீ சார் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து  கைது செய்யவுள்ளதாகக் கூறப்படு கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.