tamilnadu

தாராபுரத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தாராபுரம், ஜூலை 2 - தாராபுரம் நகராட்சி சார்பில் 107 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  விவசாயிகளின் தோட்டங்களில் வளர்த்து வரும் ஆடு களை நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்ற வருகிறது. இதில் நாய்கள் கடித்ததில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 400 ஆடுகள் இறந்துள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.  இந்நிலையில் தாராபுரம் நகராட்சி ஆணையர் உத்தர வின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகா தார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தெருநாய்களை பிடித்து நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள சுகாதார பிரிவு  கட்டிடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு திருநெல் வேலியில் இருந்து வந்துள்ள நிபுணர்கள் குழு 107  நாய் களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய் யப்பட்டது. மேலும் சுமார் 600 நாய்களுக்கு கருத்தடை  அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.