tamilnadu

img

கவர்ச்சிகரமான அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருமா? திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் சந்தேகம்

திருப்பூர், மே 14 - மத்திய அரசு கொரோனா மீட்புத் திட்டமாக சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி  கடனுதவி வழங்கப்படும் என அறிவித்திருப்பது கவர்ச்சிகரமான தாக இருந்தபோதும் இத்திட்டம் எவ் வாறு செயல்படுத்தப்படும் என்று அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று  பின்னலாடைத் தொழில் துறை யினர் விளக்கம் கேட்டுள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சில முக்கியத் தொழில் அமைப்புகள் புதனன்று மத் திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவித்த சிறு, குறு, நடுத் தரத் தொழில்களுக்கான ரூ. 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தை வரவேற் றுள்ளனர். எனினும் மிகப்பெருமளவு நடுத்தர, சிறு, குறு தொழில் அமைப்பு களை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய மற்ற அமைப்புகள் மத்திய நிதிய மைச்சரின் அறிவிப்பு குறித்து சந் தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்று மதி மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி. முத்துரத்தினம் கூறி யதாவது, கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காரணமாக பல் வேறு தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் சிறு, குறு, நடுத்தரதொழில்களுக்கு அரசு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள  வேண்டும் என தொடர்ந்து கோரிக் கை விடுத்து வந்தோம். இந்நிலையில் சிறு,குறு, நடுத்தரத் தொழில் களுக்கு கடனுதவி கொடுக்க முன்வந்து மத்திய அரசு அறிவித்திருப் பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் இந்த கவர்ச்சிகரமான அறி விப்பு எப்படி செயல்படுத்தப்படும் என்று அரசு தெளிவுபடுத்த வேண் டும்.  ஏனெனில் தற்போது தொழில்கள் முடங்கியிருக்கும் நிலையில் இயல்பு  நிலைக்குத் திரும்புவதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆகும். ஏற் கனவே தயாரித்து வைத்திருக்கும் சரக்குகள் ஏற்றுமதியாக வேண்டும். உள்நாட்டு சந்தையிலும் விற்பனை யாக வேண்டும்.

அப்படி சரக்குகள் விற் பனையாகாமல் தேங்கியிருக்கும் நிலையில் தொழில் துறைக்குக் கடன் கொடுத்தால் அந்தக் கடனை உற்பத் திக்கு பயன்படுத்த முடியாத நிலை தான் ஏற்படும். எனவே, இந்தக்கடன் கொடுப்பது உருப்படியாக தொழில் துறைக்கு பயன்பட வேண்டுமென்றால் ஏற் கனவே இத்துறையினர் சந்தித்து வரும் நெருக்கடிகளையும், சிக்கல்க ளையும் தீர்க்க வேண்டும். குறிப் பாக வங்கிகள் கூட்டமைப்பு  சார் பில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சந்தேகத்துக்கு உரியவை என பட்டியலிட்டு வைத்து விட்டால் அவர்கள் மீண்டும் வங்கி களில் கடன் பெற முடியாது. எனவே,  இந்த பட்டியலில் உள்ள நிறுவனங் கள் கடன் பெறுவதற்கு முதலில் அவர்களை சந்தேகத்துக்கு உரிய வர்கள் என்பதில் இருந்து நீக்க வேண் டும்.  மேலும் ஏற்கனவே பெற்றி ருக்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதன் பிறகு முழுமையாக இயல்பு நிலை திரும்பும் வரை வட்டி சதவிகிதத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். நிறு வனங்கள் ஏற்கெனவே சந்தித்து வரும் நிதிச்சுமையை குறைக்காமல் புதிய கடன் தந்தால் அதைப் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் வாய்ப்பில் லாமல் போகும். ஏற்கனவே முள்ளும், புதருமான இருக்கும் பாதையைச் செப்பனிட்டு விட்டு அதன்பின்னர் விரைந்து செல் லுங்கள் எனச் சொல்ல வேண்டும். அப் படியே விட்டுவிட்டு முன்னே  செல்லுங்கள் என்றால் முடியாது. அதேபோல் கடன் தருவது வங்கி கள் தான் என்பதால், மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 3 லட்சம் கோடியை சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை யினர் பெறுவதற்கான வழிமுறையை தெளிவாக வகுத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்ச்சி கரமான அறிவிப்பு பயன்பாடில் லாமல் போய்விடும்.  மத்திய அரசுக்கு அனுசரணையாக செயல்படும் மாநில அரசுக்கே கேட்ட நிதி உதவியை மத்திய அரசு தர வில்லை. இந்நிலையில் தொழில் துறையினருக்கு இப்போது அறிவித்தி ருக்கும் கடனுதவித் திட்டம் நடை முறைக்கு வந்தால் வரவேற்கத்தக் கதாக இருக்கும், இவ்வாறு அவர் கூறி னார்.