tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், ஜன. 30 – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பவர்கிரிட் நிறு வனம் உயர் அழுத்த மின் கோபு ரங்கள் அமைக்கும் பணியை விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அரசு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையின் துணையோடு செயல்படுத்தி வருகிறது. இதே போல் பல்லடம் வட்டம், செம்மி பாளையம், சுக்காம்பாளையம் பகுதிகளிலும் விவசாயிகளின் அனுமதி இல்லாமல், காவல் துறை உதவியுடன் அத்துமீறி கடந்த 21ஆம் தேதி உயர்மின் கோபுரப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் விவசாயிகள் நடை பயணமாக மாவட்ட ஆட்சியரகத் திற்கு வந்து குடியேறும் போராட் டத்தை நடத்தினர். அப்போது விளைநிலங்களுக்கு 2013ஆம் ஆண்டு நிலமெடுப்புச் சட்ட விதி முறைப்படி, சந்தை வழிகாட்டு மதிப்பில் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக இதே திட்டத்தில் கோவை மாவட் டத்தில் விவசாய நிலத்திற்கு அளிக்கப்பட்ட இழப்பீடு அள வுக்கு இங்கும் வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே பணி களைத் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத் தினர். இது தொடர்பாக மாநில நில நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் இழப்பீடு உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை பணிகளை நிறுத்துவதா கவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உறுதியளித்தார். அதற்கு இடையில் முதல் கட்ட இழப்பீடு விவசாயிகளுக்கு வழங் கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். எனினும் ஆட்சிய ரின் உறுதிமொழிக்கு மாறாக முதல் கட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் பணிகளை மீண்டும் தொடங்கிவிட்டனர். இதை எதிர்த்து கடந்த 28ஆம் தேதி விவசாயக்குடி பெண்கள் தாலிகளை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில் உயர்ந்தபட்ச இழப் பீடு வழங்க வலியுறுத்தியும், அதுவரை பணிகளை நிறுத்தக் கோரியும் வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பிச் சைப் பாத்திரம் ஏந்தி போராட் டத்தில் ஈடுபடுவதென உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவும், விவ சாயிகளும் முடிவு செய்தனர். அதன்படி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் வியா ழக்கிழமை காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்து ஆட்சியரக நுழைவாயில் முன்பாக மண் சட்டி ஏந்தியபடி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ப.கோபி ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் வழக்கறி ஞர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், வை.பழனிச்சாமி, கி.வே.பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல் துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர், திருப்பூர் கோட்டாட்சியர் ஆகியோ ரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தனர். அதில் நிலத்திற்கு உயர்ந்தபட்ச இழப்பீடு நிர்ண யிப்பது தொடர்பாக ஏற்கெனவே மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், எரிசக்தித் துறை செயலர், நில நிர்வாக ஆணையர் கலந்து பேசி இது குறித்து தீர்மா னிப்பார்கள். திருப்பூர் மாவட்டத் தில் இருந்து துணை ஆட்சியர் ஒருவர் நேரில் சென்று விவசாயி கள் கோரிக்கை குறித்து தெரி வித்து ஒரு வார காலத்தில் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதே சமயம் விளைநிலத்தில் உயர்மின் கோபுர அமைப்புப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினர். மாவட்ட நிர்வாகம் உறுதிய ளத்தபடி ஒரு வாரம் காத்திருப் பது, விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய் வோம் என்று உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகிகள் தெரி வித்தனர்.