திருப்பூர், டிச.1- பண மதிப்பிழப்பு தெரியாமல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களாக வைத்திருந்த முதியவர்க ளுக்கு சென்னையை சேர்ந்த அறக்கட்டளை ரூ.46 ஆயிரத்திற் கான காசோலை வழங்கியது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், பூமலூர் பகுதியை சேர்ந்த முதியவர்கள் ரங்கம்மாள் மற்றும் காளியம்மாள். இவர்கள் கடந்த மாதம் மருத்துவ செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது சகோதர ரிடம் வழங்கியபோது அவை செல் லாத ரூ.500, ரூ.1000 ஆக இருந்த தைப் பார்த்து அதிர்ச்சி அடைந் தார். பணமதிப்பிழப்பு பற்றி தெரி யாமலேயே பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றாமல் சுமார் 46 ஆயிரம் வரை வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த செய்தி ஊடகங்களில் பரவியதையடுத்து மாவட்ட ஆட் சியர் இவர்களை நேரில் அழைத்து, இவர்களின் மருத்துவ செலவிற் கான ஆணையையும், முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை யும் வழங்கினார். மேலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங் கியிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்ட ளையின் தாளாளர் புருஷோத்த மன் ஞாயிறன்று பூமலூரில் உள்ள முதியவர்களின் வீட்டில் அவர் களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்கள் வைத்தி ருந்த பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்றவாறு 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங் கினார். தாங்கள் சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாயை இனி மாற்ற முடியாது என்ற வேதனை, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய வகையில் அமையும் என்பதால் அதனை குறைக்கும் வகையில் இந்த உதவியை செய்ததாக புரு ஷோத்தமன் தெரிவித்தார்.