திருநெல்வேலி, ஜூலை 19- ஊரடங்கு காலத்தில் டிசம்பர் வரை ரேசன்கார்டு இருப்ப வர்கள், இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் மாதம் தோறும் 21 வகையான அத்தியா வசிய பொருட்களை விலை யில்லாமல் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலி யுறுத்தி நெல்லை மற்றும் தென் காசி மாவட்டங்களில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 19 இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் 360 பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கற்ப கம், மாதர் சங்க நிர்வாகிகள் சங்கரி, மல்லிகா, லோகநாயகி, பாப்பா, வசந்தி, சுந்தரி, கனகா, சந்தனமாரி, ஜெயந்தி, சமதி, செல்வசுந்தரி, ராமர்கனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.