திருநெல்வேலி, ஜூன் 18- கட்டுமான தொழிலாளர் களுக்கு கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ.7500 வழங்கிட கோரி கட்டுமான தொழிலா ளர்கள் சங்கம் சார்பாக தென் காசி ஆட்சியரிடம் மனு கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார், சிஐடியு மாவட்ட தலைவர் எம். வேல்முருகன், மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தென்காசி வட் டார தலைவர் லெனின்குமார், பீடி சங்க வட்டார செயலாளர் குருசாமி, செங்கோட்டை வட் டார செயலாளர் மாரியப்பன் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்டு மான தொழிலாளர்கள் பங் கேற்றனர். பின்னர் மனு கொடுக்க சென்ற போது தென்காசி காவல்துறை துணை கண் காணிப்பாளர் கோகுலகிருஷ் ணன் சங்க பொறுப்பாளர்களி டம் மிகவும் மோசமான முறை யில் ஒருமையில் பேசி, மனு கொடுக்க அனுமதி இல்லை என மிரட்டினார். காவல்துறையின் இந்த அடாவடியையும் ஜனநாயக உரிமை மறுப்பு செய்து வரும் காவல் துறை அதிகாரிகளின் மோசமான நடவடிக்கையை யும் சிஐடியுவின் திருநெல்வேலி தென்காசி மாவட்ட குழு வன்மை யாக கண்டித்துள்ளது.