சென்னை, ஜூன் 15- தமிழகம் முழுவதும் மிகப் பெரிய குடிநீர் தட்டுப்பாடு உருவாகி யுள்ளது. இது அரசியல் அரங்கிலும், சமூக வாழ்விலும் மிகப் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கி யமாக, தலைநகர் சென்னையில் மக்கள் தண்ணீரின்றி அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னைக்கு தண்ணீர் விநியோகித்து வந்த ஏரி களும் வறண்டுள்ளன. குடிநீர் பிரச்ச னையால் பலதரப்பினரும் பாதிக் கப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறை யால் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். உணவு சமைக்க போதிய குடிநீர் இல்லாத காரணத் தால் சென்னையில் உணவகங்கள் மதிய உணவு சேவையை மட்டும் நிறுத்த ஆலோசித்து வருகின்றன. ஐடி நிறுவனங்கள் நீர் போதாமை யால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தி யுள்ளன. இந்நிலையில், “சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” என்று சென்னை உயர் நீதிமன்றத் தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், உள் ளாட்சித் துறை அமைச்சர் வேலு மணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருந்திய பாடில்லை. நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளி யும் கவலைப்படாமல்- கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்க ளுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும் இருக்கின்றனர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்திலும் “டெண் டர்களில்” கமிஷன் வசூல் செய்வ தில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக் கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை- வந்திருக்காது என்றும் ஸ்டா லின் குறிப்பிட்டிருந்தார். “சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க உடனடி யாக ஆக்கபூர்வமான நடவடிக்கை களில் முதலமைச்சர் பழனிசாமி ஈடு பட வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டு மின்றி - தமிழ்நாடு மக்களும் குடி நீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம். இந்தத் தோல் விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது பதவியை உட னடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜி னாமா செய்யத் தவறினால், முத லமைச்சர் உடனடியாக, இன்றைய குடிநீர்ப் பஞ்சத்திற்கும் கோடான கோடி மக்களின் துன்பத்திற்கும் வித்திட்ட அவரை, அமைச்சர் பதவி யிலிருந்து “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும்” என்றும் ஸ்டாலின் வலி யுறுத்தியிருந்தார்.
கே.பாலகிருஷ்ணன் கேள்வி
இந்நிலையில், சனிக்கிழமை இராமேஸ்வரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், “தமி ழகத்தில் மக்களவைத் தேர்தல் ுடிந்ததில் இருந்து தமிழக முத லமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சரிபாதிக்கும் மேற்பட்ட நாட்களில் தில்லியில் தான் முகமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவி பெறுவது குறித்து மட்டுமே பேசி வருகின்றனர். குடிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் கடைக்கோடி மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தீர்வு கான சிறப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் பேசவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், “சென்னையில் நில வும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உண வகங்கள் மூடப்பட்டு வருகின்றன கிராமங்களில் காலிக் குடங்களு டன் குடிநீர் தேவைக்காக மக்கள் அகதிகளாக அலைகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத தால் நெருக்கடி முற்றுகிறது. அரசு நிர்வாகம் இருப்பதற்கான தோற்றமே இல்லை. கடந்தாண்டு தூர் வாரும் பணிக்கு ரூ.336 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் முறை கேடு நடைபெற்றுள்ளது. இந் தாண்டு ரூ.400 கோடிவரை ஒதுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள் ளது. அதை முறையாக செலவு செய்ய வேண்டும்” என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறினார். இந்நிலையில், சமூக வலை தளங்களில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை குறித்த தகவல்களை சனிக்கிழமை முழுவதும் வலைத்தள ஆர்வ லர்கள் பதிவிட்டனர். இந்த ஹேஷ் டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக் கின் கீழ் சென்னையில் நிலவும் குடி நீர் பிரச்சனை பற்றிய தகவல்கள், வறண்ட நீர்நிலைகள் பற்றிய விவ ரங்கள், தண்ணீர் போதாமையால் மக்கள் நடத்திய போராட்டங்கள், அரசுகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கைகள், தற்போதைய நீர் மேலாண்மை பற்றிய விமர் சனங்கள் என பல பதிவுகள் இடப் பட்டுள்ளன. சென்னை மட்டுமல்லாமல் கட லோர பகுதிகள், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மண்டலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனை பற்றியும், சுற்றுச்சூழல் மாசு, மாற்று வழி கள் பற்றிய விவாதங்களும் பகி ரப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி யுள்ளதால் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தேசிய அளவில் கவ னத்தை ஈர்த்து ஒரு விவாதப் பொரு ளாக உருவெடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனிடையே, குடிநீர் பற்றாக் குறையை தீர்க்க இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டி லான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.வி. வேலுமணி, கோயம்புத்தூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரி யாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிவித்தார்.