தஞ்சாவூர் டிச.2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பட்டுக் கோட்டை சாலையில் உள்ள அரசு மாணவர் விடுதி யில் இயங்கி வந்த கல்லூரி, கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு முடச்சிக்காடு சமத்துவபுரம் பகுதியில் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பேரா வூரணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் உள்ளது. இருபாலர் கல்லூரியான இங்கு பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட 1,126 பேர் படித்து வருகின்றனர். இக்கல்லூரி நகரில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. மேலும், போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கல்லூரி நேரத்திலும், கல்லூரி விடும் நேரத்திலும் இரண்டு பேருந்துகள் இவ்வழியாக இயக்கப்படுகின்றன. கல்லூரிக்கு என தனியாக பேருந்து வசதி இல்லை. அதனால் பொதுமக்களுடன் சேர்ந்து சுமார் 100 மாணவ, மாணவிகள் பயணிக்கின்றனர். இதனால் சில மாணவிகள் அங்கிருந்து 1 கி.மீ நடந்து சென்று நாட்டாணிக்கோட்டை பேருந்து நிறுத்தம் சென்றோ அல்லது 2 கி.மீ தூரம் நடந்து சென்று பூக்கொல்லை பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்து பயணிக்கின்றனர். மேலும் பல மாணவ, மாணவிகள் பேருந்து வசதி இல்லாததால் சுமார் 4 கி.மீ நடந்தே பேருந்து நிலையம் வர வேண்டிய நிலை உள்ளது. கல்லூரி செல்லும், திரும்பும் நேரத் தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் தரப்பில் கோ ரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை கும்பகோணம் மண்டல பொது மேலாளர், பேராவூரணி கிளை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப் படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக, போக்குவரத்து துறை கும்பகோணம் மண்டல பொது மேலாளர் அலுவலகம் அளித்த கடிதத்தில், “கல்லூரி நேரத்தில் இரு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எங்களது ஆய்வில், 100 மீட்டர் தொலைவிலேயே பேருந்து நிறுத்தம் இருப்ப தால் இதுவே போதுமானது” என பதில் வந்துள்ள தாக தெரிகிறது. இதுகுறித்து ஆறு.நீலகண்டன் என்பவர் கூறு கையில், “இரண்டு பேருந்திலும் அரசு அனுமதித்த இருக்கை அளவு 112 பேர். அதிகபட்சமாக பயணிப் போர் 200 பேர் என வைத்துக் கொண்டாலும், இதில் மாணவர்கள் இல்லாத பயணிகளும் உள்ளனர். 300 பேர் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் பயணிக்கி றார்கள் என்றாலும் மீதமுள்ள 700 பேர் நடந்தே செல்லும் நிலை உள்ளது. 100 மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம் என போக்குவரத்து துறை அதி காரிகள் ஆட்சியருக்கே தவறான தகவல் தந்துள்ள னர். ஒரு பேச்சுக்கு சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத் தை அதிகாரிகள், சொன்னாலும், அந்த வழியாக எத்தனை பேருந்துகள், எந்த நேரத்தில் வருகின்றன என தெளிவுபடுத்துவார்களா? பாதுகாப்பற்ற நிலையில், பேராவூரணி நடந்து செல்லும் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கும், கேலி களுக்கும் ஆளாகின்றனர். தற்போது மழை நேரத் தில் நனைந்தவாறு செல்லும் மாணவிகள் நிலை மனதை வேதனைப் படுத்துகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், இரண்டு, மூன்று முறை போராட்டம் நடத்தியும் தீர்வு காணப் படவில்லை. எனவே, அதிகாரிகள் தட்டிக் கழிக்கா மல், தேவையான பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும். மேல் அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்த பேராவூரணி கிளை போக்குவரத்து துறை அதிகாரிகள் செயல் கண்டனத்துக்குரியது” என்றார்.