tamilnadu

img

சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சியில் சாலைகளை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை யடுத்து ஒன்றிய தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், உதவி பொறியாளர் கண்ணன், சாலை ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, கவிதா, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ரமா குமார், துணைத் தலைவர் கி.பெரமையன், முன்னாள் ஒன்றி யக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.