தஞ்சாவூர் டிச.19- நெல் சாகுபடி செய்ய நாற்று விடுதல், நாற்று பறித்தல், நடவு செய்தல், களை எடுத்தல் என அனைத்து பணிகளும் விவசாயத் தொழிலாளர்களை கொண்டு செய்வதால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு, விவ சாயத் தொழிலாளர்களுக்கான கூலி யும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் நெல்லுக்கு விலை கிடைக்க வில்லை என விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நெல் நடவு செய்ய, “பேப்பர் விதை நெல் நடவு” முறையை கண்டுபிடித்தார். கடந்த குறுவை பருவத்தில் இந்த பேப்பர் விதை நெல் நடவு முறை தஞ்சாவூர் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது தஞ்சாவூர் வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுத்தோட்டம் அரசு வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் முதன்முறை யாக பேப்பர் விதை நெல் நடவு செய்யும் பணி நடைபெற்றது. இத னை களப்பயிற்சிக்காக வந்துள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் நேரடியாக பார்வையிட்டனர். இதுகுறித்து பேப்பர் விதை நெல் நடவு முறையை கண்டுபிடித்த கே.ரமேஷ் கூறியதாவது, “விவசா யத்தில் குறைவான செலவில் அதிக மகசூல் பெற வேண்டும், நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, பேப்பர் விதை நெல் நடவு முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் விதை இருந்தால் போதும், இதனை பேப்ப ரில் 6 செ.மீட்டருக்கு இடையில் நெல்லை வைத்து மடித்து பட்டாசு போல் சுருளாக மடித்துவிடுவோம். பின்னர் அதனை அதற்காக உள்ள வீல் கருவியில் மாட்டி வயலில் உருட்டிக்கொண்டு நேரடியாக நடவு செய்யலாம். இதன் மூலம் சீரான நெல் நடவு செய்யப்பட்டு 6 ஆவது நாளில் பருவம் வந்து, 15 ஆவது நாளில் முதல் களையை எடுக்கலாம். இந்த முறையில் தூர் அதிகம் வெடித்து, நெல்மணிகள் அதிகம் கிடைக்கும், இதனால் விவசாய கூலி தொழிலா ளர்களின் செலவு குறைவு. நெல் நடவு, களை எடுத்தல் ஆகியவற்று க்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும். இந்த முறையை தற்போது பலரும் கடை பிடிக்கின்றனர்” என்றார். இதுகுறித்து காட்டுத்தோட்டம் வேளாண்மை துறை பேராசிரியர் எஸ்.பொற்பாவை கூறியதாவது, “இங்கு முன்பெல்லாம் நேரடி விதைப்பு, நடவு முறை, இயந்திர நடவு ஆகியவை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது பேப்பர் விதை நெல் நடவு மேற்கொள்ளப் படுகிறது. இந்த முறையை கல்லூரி மாணவிகள் நேரடியாக பார்த்து, எதிர்காலத்தில் அவர்கள் இந்த திட்டத்தை விவசாயிகளிடம் எடுத்து சொல்ல பயனுள்ளதாக இருக்கும்” என்றார். இதுகுறித்து கல்லூரி மாணவி பிரபா கூறியதாவது,”தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் கடந்த மூன்று மாதங்களாக களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் அனுபவப் பகிர்வாக விவ சாயிகளை சந்தித்தல், விவசாய நிலங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபடுதல் என பயிற்சிகளாக மேற் கொண்டு வருகிறோம். இதில் புதிய முறையாக பேப்பர் விதை நெல் நடவினை கண்டுள்ளோம். இந்த முறையை எதிர்காலத்தில் விவசாயி களிடம் பரவச் செய்து, குறைவான செலவில் அதிக மகசூல் என்பதை எடுத்துரைப்போம்” என்றார்.