tamilnadu

img

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 24- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தஞ்சாவூர் ஒன்றியப் பேரவை திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றி யத்தலைவர் இரா.வீராசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. ரவிச்சந்திரன் துவக்க உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஆ.சகாயமேரி வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் தா.சுந்தரி செயலாளர் அறிக்கை வாசித்தார். ஒன்றியப் பொருளாளர் டி. தியாகராஜன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.  மாவட்டத் தலைவர் ஹெச்.உமா, மாவட்ட பிரதிநிதி த.விஜயா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளா ளர் எஸ்.கோதண்டபாணி, அரசு ஊழி யர் சங்க வட்டத்தலைவர் எம்.சுப்பிர மணியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மதி யழகன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ரெங்கசாமி நிறைவுரையாற்றி னார். நிறைவாக பி.லதா நன்றி கூறி னார்.  கூட்டத்தில், சத்துணவு ஊழி யர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.