tamilnadu

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர்   மாவட்ட கண்காணிப்பு குழுவினர் பட்டியல் தயாரிப்பு

தஞ்சாவூர் : தமிழகத்தின் மத்திய மண்டலத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளது.

பணி நிமித்தமாகவும், வணிகம் தொடர்பாகவும் மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் திருச்சி, சென்னை விமான நிலையங்கள் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1 -ம் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு திரும்பியவர்களின் விவரங்கள் விமான நிலைய குடியுரிமை மூலம் பெறப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 4961 பேரும், திருச்சி 4120, புதுக்கோட்டை -3340, நாகப்பட்டினம் - 2788, திருவாரூர் - 2312, பெரம்பலூர் 1162, அரியலூர் 1079, கரூர் 471 வந்துள்ளனர். இவர்களின் முகவரிகளைக் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், குடும்ப உறுப்பினர்களின்  உடல்நல பரிசோதனை செய்யப்பட உள்ளனர்.