தஞ்சாவூர், பிப்.9- தமிழக வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரை க்கண்ணு குறித்து கும்பகோ ணத்தில் துண்டு பிரசுரம் வெளியானதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் வேளா ண்மைதுறை அமைச்சராக இருப்பவர் இரா.துரைக்க ண்ணு. தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் தொகு தியை சேர்ந்த இவர் அதிமுக வில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரு கிறார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கும்ப கோணத்தில் வடக்கு மாவ ட்டம் சார்பில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் துணை ஒருங்கி ணைப்பாளரும், மாநில ங்களவை எம்.பி.யுமான ஆர். வைத்திலிங்கம், அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஆகி யோர் தலைமையில் சனிக்கி ழமை அன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கு வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கும்பகோணம் பகுதி யில் சிலர் துண்டு சீட்டு விநி யோகம் செய்ததாக கூற ப்படுகிறது. அதில் ‘அதிமுக தலைமையே திரும்பி பார்’ என தலைப்பிட்டு கொடுக்க ப்பட்ட அந்த சீட்டில் “உள்ளா ட்சி தேர்தல் தோல்விக்கு காரணம் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் செய ல்பாடு இல்லாததுடன், சாதி பார்த்து செயல்படுவது, ரூ.500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது இவை தான் காரணம். வரும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரான இரா.துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடு. இவண் இதர ஜாதி” என அந்த துண்டு சீட்டில் குறிப்பிடப்பட்டி ருந்தது. இது அதிமுக நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றி விட்டது. தேர்தல் முடிவு வெளியானதுமே அதிமுக விசுவாசிகள் அமை ச்சர் இரா.துரைக்கண்ணு மீது அதிருப்தியில் புலம்பி கொண்டிருந்தனர். கட்சியில் இரா.துரைக்கண்ணு அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே அவரின் செய ல்பாடுகள் மாறி விட்டது. அதற்கு முன் இவர் எளிமை யாகவும் எல்லோரிடத்திலும் தன்மையாகவும் நடந்து கொள்வார். ஆனால் இப்போது அப்படியே தலை கீழாக மாறிவிட்டார். அது போக அமைச்சர் ஆனதுக்கு பிறகு தன் பெயரிலும், பினாமி பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார். இது குறித்து பாபநாசம் பகுதி யில் வெளிப்படையாக பேச்சு க்கள் எழுந்துள்ளன. கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கி ணைத்து செயல்படாமல் தான் சார்ந்த சாதியினருக்கு அதிக முக்கியத்துவம் கொ டுப்பதுடன் அவர்களை வளர்த்து விடுவது போன்ற செயல்களை செய்து வந்தார். இதனால் இவர் மீது கோபம் கொண்ட யாரோ ஒருவர்தான் இது போன்ற வாசகங்களை துண்டு பிர சுரமாக வெளியிட்டுள்ளனர்” என்றனர். வெளியான துண்டுப் பிர சுரத்தால் அமைச்சர் தரப்பு ஆடிப் போயுள்ளது.