தஞ்சாவூர், டிச.15- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின், மண்டல அளவிலான கூட்டம் பட்டுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேராவூ ரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஒன்றியப் பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், “பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் முஹம்மது ராவுத்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 ஆண்டு கணினி இயக்குபவ ராக தற்காலிக பணியாற்றி அண்மையில் மறைந்த, அவ ருடைய குடும்பத்தினருடைய வாழ்வாதாரத்திற்கு, சிறப்பு நிதி வேண்டி மாவட்ட ஆட்சியரை நிர்வாகிகள் சென்று சந்திப்பது” என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலீல் முஹைதீன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் சுதாகரன், ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பிரபு உள்ளிட்ட அனைத்து ஒன்றியப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.