சென்னை, ஆக. 27- டிஆர்இயூ-வின் துணை பொதுச் செயலாளர் தோழர் கே.சங்கரநாராயணன் திங்க ளன்று (ஆக. 26) காலமா னார். அவருக்கு வயது 60. 2007ஆம் ஆண்டு முதல் மத்திய சங்க நிர்வாகியாக செயல்பட்ட அவர், தொழி லரசு இதழின் பொறுப்பா சிரியராக இருந்தார். “தொழில் உறவுகள்”, “நடத்தை விதிகள்” “மார்க் சியமும் தேசிய இன பிரச்ச னையும்” என்ற நூல்களை யும் எழுதியுள்ளார். ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு ஒரு பிரச் சனை என்றால் சங்க வித்தி யாசமின்றி உடனடியாக தலையிட்டு தீர்த்து வைப்பார். ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களுக்கு குற்றப் பத்திரிகை வழங்கி விசா ரணை நடத்தும்போதெல் லாம், ஊழியர்களுக்கு ஆதர வாக வாதாடி வெற்றி பெற்றிருக்கிறார். மறைந்த சங்கரநாராய ணனின் உடல் சென்னை ஆர்.சி. வுட்சைட் அப்பார்ட் மெண்ட்ஸ், டி பிளாக், எப். 1 டாக்டர் மூர்த்தி நகர் பிரதான சாலை, திருமுல்லைவாயில் என்ற விலாசத்தில் வைக் கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் புதனன்று (ஆக. 28) காலை 11 மணிக்கு புறப்படுகிறது. பின்னர், திரு முல்லைவாயில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவிற்கு டிஆர்இயூ, ஐசிஎப் யுனைட் டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ளது. தோழர் சங்கரநாராய ணன் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற் றார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், அஜய் சாய்ராம், சாய் அரவிந்த் 2 மகன்களும் உள்ளனர்.