ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக் கூலி மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் இடம் பெயர் தொழிலாளர்களும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிஐடியு சார்பில் மறைமலை நகர், ஒரகடம், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், தாம்பரம், பெருங்குடி, அண்ணாநகர், அம்பத்தூர், புழல், செங்குன்றம், பாடிய நல்லூர் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும், அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் வழங்கப்பட்டன. சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில நிர்வாகிகள் இ.முத்துக்குமார், கே.விஜயன், சி.திருவேட்டை, பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சேஷாத்திரி, லெனின் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.