tamilnadu

img

கொந்தளிப்பின் உச்சத்தில் வங்கம்

5 மாவட்ட இணையத் தொடர்பு துண்டிப்பு

கொல்கத்தா, டிச.15- குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் 5 மாவட்டங்களுக்கு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு தினாஜ்பூர், ஹௌரா மாவட்டங்களிலும் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பராசாத், பஷீர்கட் துணை மண்டலங்களிலும் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் பாருய் பூர்,  கானிங்க் சர் டிவிசன் ஆகிய பகுதிகளுக் கான இணைய தொடர்பு துண்டிக்கப் பட்டது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் லால்கொலா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ரயில் களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த னர். இதன் அருகில் உள்ள கிருஷ்ண கஞ்ச் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள ஹௌரா பேருந்துநிலை யத்தில் 15 பேருந்துகளுக்கு போராட்டக் காரர்கள் தீ வைத்து எரித்தனர். இந்நிலையில், சில வகுப்புவாத சக்திகள் மேற்கு வங்கத்தின் சில  பகுதிகளில் திட்டமிட்டு கலவரத்தை நடத்த முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இணையத் தொடர்பை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.