சென்னை, மார்ச் 27-
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் வசித்து வந்தார். தோல் மருத்துவராகவும் பணி புரிந்து வந்த இவர் திரைத்துறையில் ஆர்வம் கொண்டு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு திடீர் மாரடைப்பால் காலமானார். சேதுராமன் மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.