tamilnadu

ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம் இலங்கை ராணுவ தளபதி பேட்டி

கொழும்பு, ஜூன் 24-  இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடை பெற்ற தாக்கு தல் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து  செயல்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். இந்த தாக்குதல் சம்பவத்துடன் சர்வதேச பயங்கரவாத குழு தொடர்பு உள்ளதால் அருகில் உள்ள பிரதான நாடான இந்தியா வுடன் இணைந்தே செயல்பட வேண் டியுள்ளது என்று அவர் கூறினார். இந்த இரு நாட்டு அரசுக ளுக்கும், இராணுவத்திற்கும் இடை யில் அதிக தொடர்பு காணப்பட வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணி யில், நாட்டின் பாதுகாப்பு தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஒரு நாட்டில் எந்தவொரு சந்தர்ப் பத்திலும், எந்தவொரு அசம்பா வித சம்பவமொன்றும் இடம்பெறு வதற்கான சாத்தியம் காணப் படுவதாக குறிப்பிட்ட அவர், அதனை எவராலும் சரியாக கணிப்பிட்டு கூற முடியாது எனவும் கூறினார். காவல்துறையினர் குற்றப் புல னாய்வு பிரிவினர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், நாடாளுமன்ற தெரிவுக்குழு என வெவ்வேறாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவ தாகவும், அவ்வாறு நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்கு இலங்கை இராணுவம் முழு ஒத்து ழைப்பு கொடுத்து வருவதாகவும் அவர்  குறிப்பிட்டார். ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத் தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257ற்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ளதுடன், 500ற்கும் அதிகமானோர் காய மடைந்திருந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நாட்டில் அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டதுடன், அவசர காலச் சட்டம் மாதாமாதம் நாடாளுமன்ற அனுமதியுடன் நீடிக்கப்படுவது வழக்கமாகும். இதன்படி, அவசர காலச் சட்டம் நாடாளுமன்றத்தில் சனியன்று (22) ஒரு மாத காலத்திற்கு  நீடிக்கப் பட்டுள்ளது.