சேலம், நவ.13- சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கெங்க வல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள வலசக்கல் பட்டி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப் பளவு கொண்டது. இந்த ஏரி 74 கிருஷ்ணாபுரம், கெங்கவல்லி, வலக்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் பாசன வசதியாகவும் விளங்கி வருகிறது. இதனிடையே தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒருமாத மாக பெய்து வந்த கனமழையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வலசக்கல் பட்டி ஏரி நிரம்பி உள்ளது. இதன் உபரி நீர் சுவேத நதியில் கலந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் ஏரிப்பாசன விவ சாயிகள், ஏரியின் கிழக்கு புறம் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் ஏரியின் கிழக்கு வாய்க்காலில் இருந்து பாசன வச திக்காக தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறைக்கு உத்தர விட்டார். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதனன்று வலசக்கல்பட்டி ஏரியின் கிழக்கு கால்வாய் மதகில் இருந்து வினாடிக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். இத னால் வலசக்கல்பட்டி, ஆணையம் பட்டி, தெடாவூர், வீரகனூர்,வேப் பந்தட்டை ஆகிய பகுதியில் உள்ள 750 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதனால் விவ சாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.