tamilnadu

img

அசோக் லேலண்டில் உற்பத்தி நிறுத்தம் - ம.மீ.ஜாபர்

பாதிக்கப்படுவோர் தொழிலாளர்கள் மட்டுமா?

சென்னையை தலைமையிட மாகக்கொண்டு வர்த்தக  ரீதியாக வாகனங்களை உற்பத்தி  செய்யும் நிறுவனமான அசோக்லே லண்டு இந்திய சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே நிறுவப்பட்டதாகும்.  இந்நிறுவனம் தமிழகத்தில் எண்ணூரில் பிரதானமாகவும், ஓசூரில்  மூன்று யூனிட்டுகளாகவும், வட மாநிலங்களில் மூன்று யூனிட்டுகளும் என உற்பத்தி தளங்கள் அமைத்து செயல்பட்டுவருகிறது. இங்கு பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ், ராணுவ வாகனங்கள் தயாரித்து வருகிறது. 6 தொழிற் பகுதிகளாகக் கொண்ட அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.  மேலும் கப்பல் போக்கு வரத்துக்கு தேவையான இயந்திரங் களையும் தயாரித்து ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக னங்களையும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்களையும் விற்ப னை செய்து லாபம் ஈட்டிவருகிறது.  தற்போது ஜப்பானை சார்ந்த நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 7.5 முதல் 49 டன் வரையிலான அனைத்து வகை சரக்கு வாகனங்களையும் தயாரித்து வருகிறது.

அசோக் லேலண்ட் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 18 நாட்கள் வரை தனது ஆலையை மூடி உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் நிரந்தரத்தொழிலாளர்கள் மட்டுமன்றி ஒப்பந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஆர்.ஜெயராமன் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 

இதுகுறித்து பொதுத்தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தலைவர் ஆர்.ஜெயராமன் கூறுகையில், ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மோட்டார் வாகன உற்பத்தி யில் தேக்கநிலை ஏற்படுவது ஓரளவு உண்மை தான் என்றாலும் லேலண்டு நிர்வாகம் தற்போது  ரூ.1,983 லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது . அசோக்லேலண்டு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த விற்பனை கடந்த மாதம் 50.11 விழுக்காடு குறைந்து விட்டது. தங்கள் உற்பத்தியில் 8300க்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.              \

மத்திய மாநில அரசு களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக உற்பத்தியின் வளர்ச்சி குறைந்துள் ளது மறுப்பதற்கு இல்லை. அதை காரணமாக காட்டி நிர்வாகம் தொழி லாளர் வயிற்றில் அடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பந்த தொழி லாளர்களுக்கு 5 விழுக்காடு போனஸ் கூட வழங்கப்படவில்லை. ஆனால் பங்குச் சந்தையில் முதலாளிகளுக்கு தனது டிவிடன்ட் தொகையை 310 விழுக்காடு வழங்கியது நிர்வா கத்தின் முரண்பாடான செயலாகத் த்தெரிகிறது. பங்கு முதலாளிக்கு கொடுத்ததில் ஒரு சிறு பகுதியை தொழிலாளிக்கு கொடுத்திருந்தால் கூட போதும் எனலாம்.  

என்பீல்டு, எயிச்சர், டாட்டா நிறு வனங்களில் ஒப்பந்த தொழி லாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஆட்டோ மொபைல் தொழிலில் உள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி சுமையை குறைப்பதும், வங்கி மற்றும் வங்கியல்லாத நிறு வனங்களின் கடன் பெரும் முறையை எளிமைப்படுத்தவேண்டும் என்று கூறிய அவர்,  புதிய தொழில் நுட்பம் கூடுதல் உற்பத்திக்கு வழி வகுத்திருக்கிறது உண்மைதான் என்றாலும் மத்திய மாநில அரசு களின் மோசமான கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தி பாதாள த்திற்கு சென்றுள்ளது. இந்த நெரு க்கடிக்கு தீர்வு காணவேண்டுமெனில் மாற்று பொருளாதார சீர்திருத்தமே தீர்வாகும் என்றார்.

ஆட்சியாளர்களே காரணம் :  ஆர்.சுரேஷ்குமார்

அசோக்லேலண்டு ஊழியர் மற்றும் பிஎப் அறங்காவலர் சுரேஷ் கூறுகையில், கடந்த 24 ஆண்டுகளாக அசோக் லேலண்டு ஆலையில் பணி யாற்றிவருகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு ஆட்சியாளர்களே காரணம். பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட சில தவறான அரசின் கொள்கைகளின் பக்க விளைவே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கும் மந்தநிலைக்கும் காரணம் என்று காட்டமாக துவங்கிய அவர், திருவொற்றி யூர் அடுத்துள்ள எண்ணூரில் உள்ள அசோக்லேலண்ட் தொழிற்சாலை உட்பட ஓசூரில் உள்ள இரண்டு யூனிட்டுகளிலும் சேர்த்து மொத்தம் 21 நாட்கள் இம்மாதம் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளன.  இது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரை பெரிதும் பாதிக்கும். எங்கள் தேவைகளை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டி வரும். ஏற்கெனவே நாங்கள் அடிப்படைத் தேவைகளுக்கு கூட அல்லாடவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றார். 

மந்தநிலை

கடந்த காலத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் அடுத்த சில ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை ஏற்படும் என சில பொருளாதார வல்லுநர்கள் கோடிட்டு காட்டியது உண்மையாகி வருகிறது.   உள்நாட்டு விற்பனை சரிவு மட்டு மன்றி ஏற்றுமதியில் 46.91விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. தற்போது எண்ணூரில் மட்டும் 24ஆயிரம் வாகனங்களுக்கு மேல் விற்பனையின்றி தேங்கியுள்ளது. இந்தியா வில் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் மாசு அளவைக்கட்டுப்படுத்த உள்ளதாக கூறி 2000ம் ஆண்டு முதல் பிஎஸ்(பாரத் ஸ்டெஜ்) என்ற கோட்பாடுகளை  மத்திய  மாசு கட்டுப்பாடு வாரியம் அமைத்துள்ளது. இதனால் அசோக்லேலண்டு தற்போது பிஎஸ்4 ரக வாகனங்கள் உற்பத்தியிலிருந்து  பிஎஸ்6ஐ நோக்கி  மேம்படஉள்ளது. இதற்கு ஏற்ப தொழில் நுட்பங்கள் மாற்றியமைக்கவேண்டியுள்ளது. மேலும் ஏற்கெனவே தயாரித்து வைக்கப் பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை வாடிக்கை யாளர்கள் வாங்குவதற்கு தயங்குகின்றனர்.  2020ஆம் ஆண்டு மார்ச் 31க்குப்பிறகு பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் விற்காமல் இருப்பதற்கு முக்கியக்காரணம்  என சுரேஷ் கூறினார்.

நிரந்தர தொழிலாளி ஆரோக்கியசாமி

எண்ணூர் ஆலையில் பணிபுரியும் நிரந்தர தொ ழிலாளியான ஆரோக்கிய சாமி பேசுகையில், மத்திய அரசு தொழிற்சாலை களில் கட்டமைப்பு வசதி களையும், தொழிலா ளர்களின் வேலை திறன்க ளை மேம்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காமல்  பிஎஸ்4, பிஎஸ்5, பிஎஸ்6 , இ மோட்டார் என நவீன ரகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் வேலையிழப்பு ஏற்படுத்துவது, வங்கிக் கடன் நிறுத்தம், சிறுகுறு தொழில்நிறுவ னங்கள் நசிவால் உதிரிபாகங்கள் உற்பத்தி தடை என பல பிரச்சனைகள் வந்துகொண்டு இருக்கிறது. எங்களு க்கு லேஆப் காலத்தில் முழுசம்பளம் வழங் கப்படுகிறது ஆனால் பிற அலவன்ஸ் கிடைக்காது. தற்போதுகொடுக்கும் சம் பளம் எதிர்காலத்தில் பிடித்தம்(ரெக்கவரி) செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இது எங்களை போன்ற தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

வரலாறு காணாத  லே ஆப்: தவமணி 

அசோக்லேலண்டு தொழிற்சங்க நிர்வாகி தவமணி கூறுகையில், ஆட்சியா ளர்களின் தவறான  பொருளாதார அணுகு முறையால் எங்களை போன்ற தொழிலா ளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இந்த லேஆப்ஆல் நிரந்தரதொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒருபங்கு குறையும். அசோக்லேலண்டு வரலாற்றில் இதுபோன்ற நெருக்கடியை நாங்கள் சந்தித்தது இல்லை. தொழிற்தாவா சட்டம் 25எம்-ன் அடிப்படையில் ஆலைநிர்வாகமே லேஆப் அறிவித்தால் முழுச்சம்பளம் வழங்கவேண்டும் என சரத்துள்ளது. கொடுக்கும் ஊதியத்தை ரெக்கவரி என்ற பெயரில் மீண்டும் பிடித்தம் செய்யக் கூடாது என தொழிற்சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. மேலும் நிரந்தர தொழிலாளர்களை விட இங்கு வேலை செய்யும் 3 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்க ளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. ரூ.13ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒப்பந்த ஊழியர் தற்போது ரூ.4ஆயிரம் குறைவா கவே வாங்குவார்.இது அந்த குடும்பத்தை மிகவும் பாதிக்கும். லேஆப் காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஆலையினுள் கூட அனுமதிக்கப்படமாட்டார். அம்பத்தூரில் அசோக் லேலண்டை நம்பி 200க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் உள்ளன. உற்பத்தி  நிறுத்தம் காரணமாக இந்த ஆலைகள் முடங்கியுள்ளன.  இந்த ஆலைகளில்  பணிபுரியும் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலை யிழந்துள்ளனர். ஏழைத்தொழிலாளிகள் பட்டினியோடும் வாடும் நிலைக்கு காரணம்  இந்த ஆட்சியாளர்களும் ஆலை நிர்வாகமும் தான் என்றார்.

இவர்களை நம்பி எனது வியாபாரம்: பழவியாபாரி முருகவேல்

இந்த அசோக் லேலண்டு தொழிலா ளர்களை நம்பித்தான் என் வியாபாரமும் குடும்பமும் இருக்கிறது. வட்டிக்குகடன் வாங்கி இந்த கம்பெனி கேட்டுல பழ வியாபாரம் செய்துவருகிறேன். ஆலை மூடப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் போய்விடும். இளைஞர்களுக்கு இந்த அர சாங்கம் வேலை தர மறுக்கிறது. சுயமரி யாதையோடு வாழவே சுயமாக தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என இந்த வேலை செய்கிறேன். எங்களுக்கு கம்பெனியில் வேலை தராவிட்டாலும் பரவாயில்லை. இந்த தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் வேலை கொடுத்தால் போதும் நாங்கள் பிழைத்துக்கொள்வோம் என்றார்.

டீ கடை அமுதா

எண்ணூர் அசோக் லேலண்டு வாயிலில் டீ கடை வைத்திருக்கும் அமுதா கூறுகையில் ஏதோ,  லேஆப் என்று சொல் கிறார்கள் . அப்பப்போ கம்பெனிய மூடிடு வாங்களாம். கம்பெனி தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கும் தொடர்ச்சியா வேலை இருக்காதுன்னு சொல்றாங்க… நாங்க இவங்கள நம்பித் தான் கடைய நடத்துறோம் .. அடக்கடவுளே, கவர்மண்ட் இப்படி சதிசெய்யுதே… இப்பல்லாம் வியாபாரமே ஆகமாட்டேங் குது. தொழிலாளர்கள் கடன் சொல்லி டீ குடிக்குறாங்க.. அது பற்றிக்கூட கவல இல்ல. அவர்கள் முகத்துல எதையோ பறி குடுத்த, சோகம் தெரியுது. அதப்பார்த்தால் தான் கஷ்டமா இருக்கு.  எனக்கு அரசியல் தெரியாது,  இந்த அரசாங்கத்த நடத்துற வங்களுக்கும், கம்பெனி முதலாளிக்கும் நல்ல புத்திய கொடுக்கணும்னு  சாமிகிட்ட வேண்டிக்கிறேன் என்றார் அமுதா.

துணி வியாபாரி  பெரியவர் முகமது இக்பால்

அசோக் லேலண்டு கம்பெனி வாசற் படியிலத்தான் நான் பல ஆண்டுகாலமாக கர்ச்சீப், ஜட்டி, பணியன், துண்டு, சாக்ஸ் உள்ளிட்ட துணிவியாபாரம் செய்து வரு கிறேன். ஒரு நாளைக்கு ரூ.1500க்கு வியாபா ரம் ஆகும். ஆனா இப்ப ரூ.150க்குகூட வியாபாரம் ஆகமாட்டேங்குது. இந்த தள்ளாத வயதில் என்னால் எங்கு போய் வியாபாரம் செய்யமுடியும். இந்த தொழிலா ளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைச்சா நல்ல இருக்கும் என்றார். உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் விற்காமல் தேங்கி இருப்ப தற்கு தனியார் வாடகை கார் நிறுவ னங்களே காரணம் என சில அரசியல் அறிவு ஜீவிகள் கூறுவதை கேட்க வேடிக்கை யாகத்தான் இருக்கிறது. எவ்வளவு தான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கினாலும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் எந்த பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வாய்ப் பில்லை என்று பொருளாதார வல்லுநர் கள் சொல்வதை ஆட்சியாளர்கள் கேட்பார்களா?  ஏழையின் தலையில் எண்ணெயில்லை. ஏன் என்றால் ஆள்பவர் தலையில் எதுவுமே இல்லை என்றாராம் ஒரு கவிஞன்.