tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

 சென்னை,அக்.14- வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 2வது முறையாக   வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது. முன்னதாக தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15 ஆம் தேதி வெளி யிடப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளுக்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த அவகாசத்தை 2வது முறையாக நீட்டித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்து ள்ளார். அதன்படி வாக்காளர் பட்டி யல் சரிபார்க்கும் பணிகளுக்கான அவகாசம் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் செய்வோர், புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 25 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வுள்ளது.